இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(என் காதலர்) என்னிடத்தில் காதலுள்ளவராக இருக்கும் போதே எனக்கு இவ்வளவு துன்பம் வரச் செய்துவிட்டாரே! என்னிடத்தில் ஏதேனும் வருத்தமுற்றுப் பிரியம் இல்லாதவராகி விட்டால் இன்னும் எவ்வளவு துன்பம் உண்டாக்குவாரோ தெரியவில்லை!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இன்பத்தினைச் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பத்தினைச் செய்பவர், துன்பம் செய்வதற்கான பகைமையின் கண்ணே என்ன செய்வாரோ?.
Translation
Who work us woe in friendship's trustful hour,
What will they prove when angry tempests lower?.
Explanation
He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?.