LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு

தமிழர்களின் அறம்சார் வணிகத்தின் இரண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் இவ்வாரம் கண்ணில் பட்டது. அதைப்பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. அதிலிருந்து திரட்டிய செய்தியை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது என்பது தொடர்ந்து உரையாடப்படும் தலைப்புதான். இலக்கிய ஆர்வமும் , மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்ட (Social Entrepreneurs) தமிழர்கள் வணிகத்தில் வெற்றிபெறும்போது அது தமிழுக்குப் பெருமைசேர்க்கும். அவர்கள் தன் அடையாளமான மொழியை, எழுத்தாளர்களை, இலக்கியத்தை கொண்டாடுவார்கள். நிலக்கோட்டை திரு.மு.வ.மா.ஜெயச்சந்திரன் மற்றும் கரூர் திரு க.செங்குட்டுவன் இருவரும் முன்மாதிரியானவர்கள்.

 

வலைத்தமிழில் இதை வரவேற்று செய்தியாக வெளியிட்டுள்ளது
https://www.valaitamil.com/social-entrepreneur_20181.html



1) இலங்கை கொக்குவில் கிராமத்தில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்ற பெயரில் நகரின் நகைக்கடை ஒன்று விற்பனை சலுகை ஒன்றை அறிவித்து இந்த விளம்பரத்தை செய்திருக்கிறது. திரைப் பிரபலங்களையும் கவர்ச்சி கன்னிகளையும் விடுத்து ஒரு தமிழ் எழுத்தாளரின் புகைப்படத்தை அதுவும் தமிழ்நாட்டின் சிறு நகரத்தில் ஒட்டியிருப்பது தமிழர்களின் அறம்சார் வணிகச் செயல்.

கடையின் உரிமையாளர் நண்பர் திரு. மு.வ.மா.ஜெயச்சந்திரன் அவர்கள் நல்ல இலக்கிய ஆர்வலர் மற்றும் தமிழ் பற்றாளரர். சென்ற வருடம் தமிழக தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் பிறந்த நாளன்று தனது நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள்
அறிவித்தார். இந்த வருடம் 12 மாதங்களில் பிறந்த 18 தமிழ் எழுத்தாளர்களின் பிறந்த நாட்களில் சலுகைகள் அறிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி உண்மையில் வணிகமும் இலக்கியமும் கைகோர்த்து பயணிப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
https://www.facebook.com/photo/?fbid=2307468806094283&set=a.1079960445511798

2) கரூர் திருக்குறள் ஆர்வலர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் புரலவர் குழுவைச் சார்ந்த திரு. க.செங்குட்டுவன் கள்ளுண்ணாமை அதிகாரத்தின் குறள் -பொருள் சொல்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்துள்ளார்.
https://www.facebook.com/ValaiTamil/photos/a.405055886240491/5840018682744157/

 

 

by Swathi   on 15 Jan 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.