LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை சித்திரைத் திருவிழா. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 12-ம் தேதியும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 19-ம் தேதியும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த 21-ம் தேதியும், தேரோட்டம் 22-ம் தேதியும் விமரிசையாக நடைபெற்றன. 

 

இதற்கிடையே, மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுக்காக அழகர் மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் மதுரைக்குக் கடந்த 21-ம் தேதி புறப்பாடானார். மூன்றுமாவடியில் எதிர்சேவை கடந்த 22-ம் தேதி மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் எதிர் சேவை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை வரவேற்றனர். பின்னர், புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட்போஸ்ட், தல்லாகுளம் அம்பலக்காரர் மண்டகப்படி உட்பட நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். 

 

இரவு 8 மணிக்கு மேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கினார். இரவு 11.30 மணிக்குமேல் திருமஞ்சனமாகி, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையைச் சூடி அருள்பாலித்தார். இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம், சித்ரா பவுர்ணமி நடைபெற்றது. முன்னதாக, 23-4-2024 அன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளி, பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் ஆயிரம்பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் கள்ளழகர் அருள்பாலித்தார். தொடர்ந்து, பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, வைகை ஆறு நோக்கிப் புறப்பட்டார். 

 

பூமாலைகள், வெட்டிவேர் மாலை இதற்கிடையே, வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்கார தெரு வீரராகவப் பெருமாள், வெள்ளிக் குதிரையில் அதிகாலை 5 மணி அளவில் வைகை ஆற்றில் உள்ள சந்திப்பு மண்டபத்துக்கு வந்தடைந்தார். 

 

வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக ஆழ்வார் புரம் வைகைக் கரைக்குத் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் அதிகாலை 5.51 மணிக்கு வந்தார். அங்குக் கள்ளழகர் கோயில் சார்பில் அவருக்குப் பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் சாற்றப்பட்டன. 

 

பின்னர், வீரராகவப் பெருமாள் வர வேற்க, பக்தர்கள் மனங்குளிரக் கள்ள ழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் காலை 6.02 மணிக்கு எழுந் தருளினார். அங்கு லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள், ‘‘கோவிந்தா, கோவிந்தா, அழகர்மலையானே’’ என பக்திப் பெருக்குடன் கோஷமிட்டனர். 

 

ஏராளமானோர் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். கருப்பசாமி வேடமணிந்த ஏராளமான பக்தர்கள், கள்ளழகர் மீது தோள்பை துருத்தி மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவரை குளிர்வித்தனர். பின்னர், மண்டகப்படியை 3 முறை வலம்வந்து பக்தர்களுக்குக் கள்ளழகர் அருள்பாலித்தார். 

 

அங்கு வையாழி ஆகி, பின்னர் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளி வீரராகவப் பெருமாளுக்கு முதல் மரியாதையாக மாலை சாற்றப்பட்டது. பின்னர், அறநிலையத் துறை மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார். இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, முன்னாள் அமைச்சர் ஆர்,பி. உதயகுமார், நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

வைகை ஆற்றிலிருந்து கள்ளழகர் காலை 7.35 மணி அளவில் புறப்பட்டு, ஆழ்வார் புரம் வழியாக ராமராயர் மண்டபம் சென்றார். அங்கும் கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். பின்னர், அண்ணா நகர் வழியாகப் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருளினார். மண்டூக முனிவருக்கு மோட்சம் ஏப்.24) வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தார் கள்ளழகர். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெற்றது. வரும் 25-ம் தேதி பூப்பல்லக்கு நடை பெற் றது. 26-ம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் கள்ளழகர், 27-ம் தேதி அழகர் மலை திரும்பினார் . 28-ம் தேதி உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவடைந்தது . விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் லெ.கலை வாணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

by Kumar   on 25 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.