LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வாக்காளர்களுக்கு பயிற்சி தர வாக்குச்சாவடி எல்லை வரை நடமாடும் வாகனம்!

வாக்காளர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செயல்விளக்கம் அளிக்க, நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள், 9 - ந் தேதி முதல், தொகுதிக்குள் வலம்வர உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கும் தேர்தல் பிரிவினர், யாரும் எதிர்பார்க்காத வகையில், வாக்காளருக்கு, நேரடி செயல்விளக்கம் அளிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்

தேர்தல் வரலாற்றில் இதுவரை, தேர்தல் அலுவலர்களுக்குத்தான் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. பொதுமக்களுக்கு, ஊடகங்கள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலை மாறிவிட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், வாக்களித்தது யாருக்கு என உறுதி செய்யும், 'விவி- பேட்' இயந்திரம் பயன்படுத்தப்பட இருப்பதால், வாக்காளருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

அதன்படி, வாக்குச்சாவடி எல்லை வரையில், வாக்காளரை தேடிச்சென்று, வாக்களிப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுக்கு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும், 'விவி -பேட்' கருவியுடன் கூடிய, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு, வாக்காளர்கள் ஏற்கனவே தயாராகி விட்டனர்.இருப்பினும், 'விவி-பேட்' பயன்பாடு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வாக்குச்சாவடி எல்லைகளுக்கு நேரில் சென்று, வாக்காளருக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

ந்தேகங்களும், உடனுக்குடன் தீர்க்கப்படும்.நேரடி செயல் விளக்க பயிற்சிக்காக, நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள், தொகுதிக்குள் வலம் வர உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும், 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம், பயிற்சிக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

by Mani Bharathi   on 08 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.