LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு

 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதே நூற்றாண்டில் 1905ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகம் அது என்பதை கண்டறிந்தார்.
*******************************
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை ஆற்றின் கரையில் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வின் மூலம் “சங்க இலக்கியக் குறிப்புகளும், கீழடியில் கிடைத்த தடயங்களும் ஒத்திருக்கின்றன” என்பதையும் தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் கீழடி என்பதையும் கண்டறிந்தனர்.
*******************************
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே வியப்பில் ஆழ்த்தியதைப் போலவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
*****************************
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, பூம்புகார், முசிறி (கேரளம்) போன்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. நமது தொன்மையின் சிறப்பையும் பெருமையையும் உலகமே வியந்து பாராட்டுகிறது.
****************************
இத்தகைய தொன்மைக்கும் பெருமைக்கும் உரிய தமிழர்கள் எத்தனை பேர் இந்த உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். எனவே, அனைத்துத் தமிழர்களும் நமது வரலாற்றுத் தொன்மையை அறிந்துகொண்டு பெருமித உணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பு தனது 10ஆம் ஆண்டு மாநாட்டினை “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடத்தவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சையில் இம்மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
*****************************
கண்காட்சி
****************************
சிந்துவெளி நாகரிகம், தமிழ்நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள் மற்றும் மறைந்துபோன நெல் வகைகள் போன்றவை இடம்பெறும் தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது. தமிழர் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்தளிக்கும் அரியதொரு கண்காட்சி ஆகும்.
****************************
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்று தமிழர்களின் தொன்மை வரலாற்றுச் சிறப்பினை எடுத்துரைக்கவிருக்கிறார்கள்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதே நூற்றாண்டில் 1905ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகம் அது என்பதை கண்டறிந்தார்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை ஆற்றின் கரையில் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வின் மூலம் “சங்க இலக்கியக் குறிப்புகளும், கீழடியில் கிடைத்த தடயங்களும் ஒத்திருக்கின்றன” என்பதையும் தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் கீழடி என்பதையும் கண்டறிந்தனர்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே வியப்பில் ஆழ்த்தியதைப் போலவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, பூம்புகார், முசிறி (கேரளம்) போன்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. நமது தொன்மையின் சிறப்பையும் பெருமையையும் உலகமே வியந்து பாராட்டுகிறது.

இத்தகைய தொன்மைக்கும் பெருமைக்கும் உரிய தமிழர்கள் எத்தனை பேர் இந்த உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். எனவே, அனைத்துத் தமிழர்களும் நமது வரலாற்றுத் தொன்மையை அறிந்துகொண்டு பெருமித உணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பு தனது 10ஆம் ஆண்டு மாநாட்டினை “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடத்தவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சையில் இம்மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கண்காட்சி தமிழர் நாகரிகத் தடயங்களின்

சிந்துவெளி நாகரிகம், தமிழ்நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள் மற்றும் மறைந்துபோன நெல் வகைகள் போன்றவை இடம்பெறும் தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது. தமிழர் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்தளிக்கும் அரியதொரு கண்காட்சி ஆகும்.


இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்று தமிழர்களின் தொன்மை வரலாற்றுச் சிறப்பினை எடுத்துரைக்கவிருக்கிறார்கள்.

 

by Kumar   on 17 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.