புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். "(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.)
(எல்லா அறங்களுக்கும் அடிப்படை மனச் சுத்தம்.) உடலின் வெளிப்புறத்தைத் தண்ணீரால் சுத்தப்படுத்தலாம். ஆனால் உடலின் உட்புறமாகிய உள்ளத்தை வாய்மை தான் சுத்தப்படுத்தும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு உடம்பு தூய்மையாவது நீராலேயே அமையும். மனம் தூய்மையாக இருப்பதென்பது வாய்மையால் உண்டாகிக் காணப்படும்.
Translation
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
Explanation
Purity of body is produced by water and purity of mind by truthfulness.