திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]
மணக்குடவர் உரை:
ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க.
இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; ஓழுக்காறாக்கொள்க-தனக்குரிய ஓழுக்க நெறியாகக்கொள்க.
இயல்பு இயல்பான தன்மை ஒழுக்காறாக் கொள்ளுதல் உயிரினுஞ் சிறப்பாகப் பேணிக் காத்தல்.
கலைஞர் உரை:
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய
நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிறருடைய நல்வாழ்வைக் கண்டு பொறாமைப் படாமலிருக்கிற குணத்தை ஒவ்வொருவனும் தன்னுடைய வாழ்க்கை நெறி முறையாக மனத்தில் வைக்க வேண்டும்.'
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் தன்னுடைய மனத்தில் பொறாமை என்னும் குற்றம் இல்லாத தன்மையினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.
Translation
As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.
Explanation
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.