திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)
மணக்குடவர் உரை:
முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
உள்ளே புகுந்தவர்களுடன் போர் புரிய நேர்ந்தால் அவர்கள் ஒருமிக்கக் கவிழ்ந்து விடக்கூடிய தந்திரமுள்ள வேலைப்பாடுகள் அமைந்த பெருமையுள்ளதாக விளங்கக் கூடியதே கோட்டையாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
போர் தொடங்கியபோது பகைவர் கெடும் வண்ணம், உள்ளிருப்போர் செய்யும் செயல் வேறுபாடு களால் வீறுபெற்று மேலும் வேண்டிய ஆட்சியினை உடையதே அரணாகும்.
Translation
At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.
Explanation
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.