LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.

எழுத்தாளர் சோம.வீரப்பன் எழுதிய `திருக்குறளில் மேலாண்மை' தொடர்பான ‘தி ஆர்ட் ஆஃப் ஜாகிங் வித் யுவர் பாஸ்’ (The art of jogging with your boss) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை, பெல் நிறுவன பொது மேலாளர் ஐ.கமலக்கண்ணன் வெளியிட்டுப் பேசினார். முதல் பிரதியை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் மஃப்ரூஜா சுல்தானா, இந்த நூலை வங்காள மொழியில் மொழிபெயர்க்கத் தங்களது நிறுவனத்தின் இயக்குநர் பர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

 

நூல் ஆசிரியர் `குறள் இனிது' சோம.வீரப்பன் பேசும்போது, ‘‘இந்த நூல் விரைவில் இந்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளிலும் வெளிவர உள்ளது. மேலைநாட்டு மேலாண்மை வல்லுநர்களையே கொண்டாடும் நாம், நமது திருவள்ளுவர் உலகின் மூத்த மேலாண்மை குரு என்பதை மறந்துவிடுகிறோம். திருக்குறளை மேலாண்மை பாடத் திட்டத்தில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

 

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் பத்ரிநாத், ஹரிஹர் அலாய்ஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, ஹைடெக் நிறுவனத்தின் முத்தையா, கரூர் திருவள்ளுவர் கல்லூரியின் செங்குட்டுவன், பெல்நிறுவன பொது மேலாளர் மகேந்திரன், நூல் குடில் பதிப்பகத்தின் மெய்யப்பன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மைக்கேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ராமநாதன் வரவேற்றார்.

 

இந்த நூலை 150 பிரதிநிதிகளுக்கு முன்பதிவு செய்திருந்த கவின்கேர் நிறுவனத்தின் சார்பில், அதன் விற்பனை அலுவலர் பிரபாகர் நூலைப் பெற்றுக் கொண்டார்.

 

160 பக்கங்களைக் கொண்டு,`இந்து தமிழ் திசை' வெளியீடான இந்த நூலின் விலை ரூ.250.

 

 

நன்றி - ,`இந்து தமிழ் திசை'

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.