குன்று அன்னார் - மலை போலும் மாதவர்; நிலத்து நின்ற அன்னார் குன்ற மதிப்பின் - இந்நில வுலகத்தில் அழிவின்றி நிலைபெற்றவர் போல் தோன்றும் பெருஞ்செல்வப் பேரரசர் கெடக்கருதுவராயின்; குடியொடு மாய்வர் - அவர் தம் இனத்தொடும் அழிந்து போவர். தட்பவெப்பத்தையும் பிறர் செய்த தீங்கையும் பொறுத்துக் கொள்ளுதலும், சூறாவளி வீசினும் பெருந்துன்பம் நேரினும் உடலுளம் அசையாமையும், ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்றலும், இம்மை மறுமை வீடென்னும் மும்மையுமு பற்றிய அறிவுப் பொருள் வளமும், ஆவிவளர்ச்சிப்பெருமையும் ,நெடுந்தொலைவுந் தோன்றுஞ் சீர்த்தியும் உடைமையால், 'குன்றன்னார்' என்றார். "மல்லன் மலையனைய மாதவரை" என்று சிந்தாமணி கூறுவதும் (முத்தி. 191)இக்கருத்தைப் பற்றியே. குன்றென்னுஞ் சொல் இங்குத்தன் சிறப்புப் பொருளைக் குறியாது மலையென்னும் பொதுப்பொருள் குறித்து நின்றது.'மதிப்பின்' என்பதற்கும் 'குடியொடு மாய்வர்' என்பதற்கும் ,முந்திய குறளில் 'செறின்' என்பதற்கும் 'வகை' மாண்ட ... என்னாம்' என்பதற்கும் உரைத்தவாறுரைக்க.
கலைஞர் உரை:
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சலனமில்லாத தன்மையால் உயர்ந்து) மலைபோன்ற பெரியார்கள் மனம் நொந்து குறைவாக எண்ணிவிட்டாலும், அவர்களுக்குத் துன்பம் செய்தவர்கள் உலகத்தில் உயர்ந்து நின்றவர்களானாலும் குலத்தோடு அழிந்து போவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
குன்றினையொத்த அருந்தவத்தோர் கெட்டுப் போகுமாறு நினைப்பாராயின் அப்போதே இப் பூமியில் நிலைபெற்றுள்ள செல்வந்தர் தம் குடியோடும் அழிவர்.
Translation
If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed.
Explanation
If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.