LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மதுரையில் கலைஞர் நூலகம் ,சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை, கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு மணிமண்டபம்

 மதுரையில் கலைஞர் நூலகம் ,சென்னையில் பன்நோக்கு மருத்துவமனை கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு மணிமண்டபம்

சென்னைகிண்டியில் அமைந்துள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில் பொதுப் பணித்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அமைச்சர் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம், சென்னையில் அமைய உள்ள பன்னோக்கு மருத்துவமனை, கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் கட்டப்படவிருக்கும் மணிமண்டபம் ஆகிய கட்டிடங்களுக்கான மதிப்பீடுகள் மற்றும் வரைபடங்களை அதிகாரிகள் விரைவில் சமர்பிக்க வேண்டும் என்று கூறினார்.
பொதுப்பணித் துறையால் தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான ஆக்சிஜன் குழாய் இணைப்பு பணிகள், மின்விளக்கு பொருத்தும் பணிகள், நடைபெற்று இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், 11 இடங்களில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதிய மருத்துவமனைகளின் கட்டிடப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் ரூபாய் 250 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் ரூபாய் 70 கோடியில் கட்டப்படவிருக்கும் கலைஞர் நினைவு நூலகம், மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் நினைவாக அமையவிருக்கும் மணிமண்டபம் ஆகியவற்றின் மதிப்பீடுகள் மற்றும் வரைபடம் போன்றவை விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஹிலாரி கிளின்டனால் பாராட்டப்பட்டது.அதேபோல் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகமும் பாராட்டப் பெறும் வகையில் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

by R.Gnanajothi   on 21 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.