அன்பு - எல்லார் மேலுமுள்ள அன்பும், நாண் - பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , ஒப்புரவு - வேளாண்மையும் ; கண்ணோட்டம் - எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; வாய்மையொடு - உண்மை யுடைமையும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம். "என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே," என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (779), எண்ணோடு முன்னவற்றொடும் ஒன்றியது, இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நில்லாமையின், இவற்றைத் தூணென வுருவகித்தார். சால்பை மண்டபமென வுருவகியாமையின் , இது ஒருமருங்குருவகம். இங்கு எளியார் என்றது செல்வம்,கல்வி, உடல்வலிமை, அகவை முதலிய பலவகையிலுந் தாழ்ந்தவரை.
கலைஞர் உரை:
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
யாரிடத்தும் அன்புடைமை, பழி பாவங்களுக்கு அஞ்சி நடத்தல், எல்லாருக்கும் உபகாரியாக இருத்தல், தாட்சிண்ணியம் காட்டுதல், சத்தியந்தவறாமை ஆகிய ஐந்து கொள்கைகளும் சேர்ந்து தூண்களாகத் தாங்கி நிற்கிற பெரும் பொறுப்புத்தான் சான்றாண்மை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அன்பும், நாணமும், ஒப்புரவும், கண் ணோட்டமும், வாய்மையும் என்ற ஐந்தும் சால்பு என்கின்ற பாரத்தினைத் தாங்கும் தூண்கள் ஆகும்.
Translation
Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place.
Explanation
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.