LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை போக்குவரத்து போலீசாருக்கு குளிர்விக்கும் தொப்பி

 

ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் போக்குவரத்து போலீசாருக்கு கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த அரசுகள் குளிர்விக்கும் தொப்பிகளையும், குற்றச்சம்வங்களை கண்காணிக்க சட்டையில் பொருத்தும் கேமராக்களும் வழங்கியுள்ளது.
*********************** 
அதன்படி சென்னை போக்குவரத்து போலீசாருக்கும்  இந்தவகை தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடும் வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு தொப்பி வழங்கப்படும். இது வெயிலையும் வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. தற்போது, அவர்களுக்கு      சோதனை முறையில் குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. 
******************************
தொப்பியின் மேற்புறத்தில் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட மின்விசிறி பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை, போலீசார் தங்கள் இடுப்பு பகுதியில் மாட்டிக்கொள்வார்கள்.  இந்த தொப்பி 900 கிராம் எடையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உத்தரக்காண்ட்  மாநிலத்தை சேர்ந்த 'கரம்' என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. 
***************************
தற்போது சோதனை முறையில், சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனை பொருத்து போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும்      போலீசாருக்கு, சட்டையில் கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
************************************ 
இத்திட்டத்தை தமிழக போலீஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் சென்னை போலீசாருக்கும் சட்டையில் அணியும் கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது.  இந்த சோதனை முறை வெற்றிபெற்றால் தமிழகம்     முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு      தொப்பியும், கேமராவும் வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

ஆந்திரா, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் போக்குவரத்து போலீசாருக்கு கடும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த அரசுகள் குளிர்விக்கும் தொப்பிகளையும், குற்றச்சம்வங்களை கண்காணிக்க சட்டையில் பொருத்தும் கேமராக்களும் வழங்கியுள்ளது.

அதன்படி சென்னை போக்குவரத்து போலீசாருக்கும்  இந்தவகை தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடும் வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு தொப்பி வழங்கப்படும். இது வெயிலையும் வெப்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. தற்போது, அவர்களுக்கு      சோதனை முறையில் குளிர்விக்கும் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.

900 கிராம் எடை 

தொப்பியின் மேற்புறத்தில் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட மின்விசிறி பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை, போலீசார் தங்கள் இடுப்பு பகுதியில் மாட்டிக்கொள்வார்கள்.  இந்த தொப்பி 900 கிராம் எடையில்  தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உத்தரக்காண்ட்  மாநிலத்தை சேர்ந்த 'கரம்' என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது சோதனை முறையில், சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனை பொருத்து போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும்      போலீசாருக்கு, சட்டையில் கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நம்பிக்கை 

இத்திட்டத்தை தமிழக போலீஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் சென்னை போலீசாருக்கும் சட்டையில் அணியும் கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது.  இந்த சோதனை முறை வெற்றிபெற்றால் தமிழகம்     முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு  தொப்பியும், கேமராவும் வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

 

by Kumar   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.